வெள்ளி, 14 பிப்ரவரி, 2014
பெருங்கேள்வி
சனி, 25 ஜனவரி, 2014
முதுமையிலும் இனிது காதல்...
காத்திருப்புகள்
புதன், 19 டிசம்பர், 2012
ஞாயிறு, 29 ஏப்ரல், 2012
மழையுதிர்க் காலம்!
மழை பொழியும் மாலைப்
பொழுதொன்றில் சற்று நின்று நிதானித்து ஓடும் நீரை ஒருமுறை பார்த்ததுண்டா நண்பர்களே? யாருக்காகவும் எதற்காகவும் காத்து நிற்காமல், இயற்கையோடு
இசைந்து ஓடிக்கொண்டே இருக்கும் நீர் சொல்லும் சேதி மகத்தானது. வாய்ப்பு கிடக்கும் போதெல்லாம் புதுப் பாதை வகுத்து,
எதிர்ப்படும் தடைகளை தகர்த்தெறிந்து, மேடுகளை கடக்க நின்று நிதானித்து பலம் சேர்த்து,
பள்ளங்களில் சட்டென நீர்வீழ்ச்சியாய் வீழ்ந்து தெறித்து, சிறுகற்களை மூழ்கடித்து, மிரட்டி
நிற்கும் பெருங்கற்கள் முன் பணிந்து பின் அதனைச் சுற்றி வளைந்து நெளிந்து பயணிக்கும்
நீர் எப்போதும் தன் இயல்பிலிருந்து மாறுவதில்லை.
அதன் விரைவிலும் ஒரு தளர்வு; ஆக்ரோஷத்திலும் ஓர் அமைதி. பயணம் ஒன்றே அதன் குறிக்கோள்! ஓடும் நீர் சொல்லும் பாடம் நம் எல்லோருக்குமானது… - சுப்ரமண்ய
செல்வாவியாழன், 11 ஆகஸ்ட், 2011
கருத்து
என்னைப் பற்றிய
உன் கருத்து
என்னைப் பற்றியல்ல
உன்னைப் பற்றியே
அதிகம் சொல்கிறது...
வெள்ளி, 11 மார்ச், 2011
காதற் பிறப்பு
எனது மவுனம்(இருபது ஆண்டுகளுக்குப் பின் நான் எழுதியிருக்கும் காதல் கவிதை)
எனது மொழி
எனது புன்னகை
எனது அசைவு
எதுவும் புரியாதவளாய்
எப்போதும் என்
தொடர்பு எல்லைக்கு
அப்பால் இருப்பதாய்
பாவனை செய்கிறாய்.
ஆயினும் நானறிவேன்
என் உயிரின் ஆழத்தில்;
ஆண் பெண் உறவின்
அதீத உள்ளுணர்வில்
நான் அறிவேன்
உன்னுள் என்னில்
உயிர்ப்பெற்றிருக்கும்
உறவை.
இன்னுமொன்றும் அறிவேன்
பெண்ணே;
இம்மியும் வழுவாத
இயற்கையின் நியதியை;
உயிர்ப்பெறுதலுக்கும்
உருப்பெறுதலுக்குமான
இடைவெளியை.
காத்திருக்கிறேன்
காத்திருப்பேன்
காதற் பிறப்புக்காய்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


