சனி, 17 ஜூன், 2017

சகுனம்

சாலையோரம்
குறுக்கே செல்ல
காத்திருந்த பூனையை
வேகமாய் கடந்து நடந்தேன்.

..............................

கிறீச்சிட்ட சக்கர சப்தம்...
பூனையின் அலறல்...

திரும்பிப் பார்த்தேன்.

வீதி கடக்க முயன்ற பூனை
வேக வாகனத்தில் பட்டு...

பாவம் பூனை
சகுனம் பார்க்கவில்லை
போலும்.

- சுப்ரமண்ய செல்வா -