வியாழன், 22 ஜூலை, 2010

கேள்வி

நீ நோக்காததால் 
நான் நோக்கவில்லை.
நீ புன்னகைக்காததால்
நான் புன்னகைக்கவில்லை.
நீ பேசாததால்
நான் பேசவில்லை.
ஜெயித்ததாய்
இறுமாந்திருந்தது மனது.
சட்டென விழித்து
கேட்டது புத்தி,
'நான் ஏன்
நீயாக வேண்டும்?'

***  சுப்ரமண்ய செல்வா ***  

கருத்துகள் இல்லை: