வெள்ளி, 23 டிசம்பர், 2016

தீராக்கடன்

ஐயாயிரம் புத்தம் புது விடியல்கள்
ஒரு கோடி பனிச்சொறியும் புது மலர்கள்
ஐயாயிரம் பொன் போர்த்திய அஸ்தமனங்கள்
ஒரு கோடி சில்லிட்ட பனித் திரள்கள்
ஐந்து அமைதிமிகு நண்பர்கள்; ஒரு குழந்தையின் நேசம்
மேலே ஒரு வெண்மேகக் கடல்
ஒரு நூறு இசை உலவும் கனவுகள்
நிலவொளியில் நனைந்த பாதைகள்; விரைந்தோடும் சிற்றோடை
நறுமணக் காட்டில் ஓரு ஜுன் இரவு
அன்பு செய்கிற… புரிந்துகொள்கிற ஒரு இதயம்
அன்று காலை விழித்த வேளை நான் வியந்தேன்
இறைவா…!
எப்படி நான் இந்த கடனை அடைப்பேன்?

மூலம்: Courtland W. Sayers
தமிழாக்கம்:  சுப்ரமண்ய செல்வா

கருத்துகள் இல்லை: