புதன், 28 டிசம்பர், 2016

வேர்கள் சொல்லும் வேதம்

செகொவ்யா* எனும் பெருமரம்
ஆண்டுகள் பல்லாயிரம் அழியாதிருக்குமாம்
அடைமழை பெருவெள்ளம் புயல்காற்று
எதனாலும் அதனை வேரறுக்க முடியாதாம்
ஆயினும் அதன் வேர்கள்
ஆழ ஊடுறுவிச் செல்லாதாம்.
ஆச்சர்ய உண்மை!

அதிர்ந்து போன அறிவியல்
நிலம் தோண்டி தேடிற்று.
மண் மறைத்த  ரகசியம் தென்பட்டது.

செகொவ்யா வேர்கள்
பக்கவாட்டில் படர்ந்து
தன் சக மர வேர்களை
பற்றிப் பிணைந்து
பலம் பெற்றுக் கொள்ளும்.

செகொவ்யா வனமெங்கும்
செம்மர வேர்கள்
கிளை பரப்பி கரங்கோர்த்து
ஒன்றொக்கொன்று உறுதுணையாகி
காலத்தை வெல்லும்
சூட்சுமம் சொல்லும்

வேர்கள் சொல்லும் வேதம்
புரிகிறதா மானுடமே?

*sequoia

-- சுபரமண்ய செல்வா --

கருத்துகள் இல்லை: