செவ்வாய், 17 ஏப்ரல், 2018

கானகத் தீர்மானம்

மலரைக் கசக்கி
மகிழும் வக்கிரம்
மனிதருக்கு மட்டுமே

பிறகேன் எம்மை
வம்புக்கிழுக்கின்றீர்

எங்களில் எவரும்
தங்கள் பெண்டிரை
கூடியென்ன
தனியேயேனும்
சிதைப்பதில்லை

எனின்
மிருங்கங்கள் போலென
எங்ஙனம் உரைப்பீர்

ஆதலினால் இனி
குரூரத்திற்கு உவமையாய்
மனிதரைக் கொள்வதென
மாக்கள் கூடி
முடிவு செய்தோம்.

- சுப்ரமண்ய செல்வா -

கருத்துகள் இல்லை: