சனி, 21 ஏப்ரல், 2018

கசப்பினிமை

நீ கையசைத்து
கடந்து சென்ற காட்சி
கடலடி பாறையாய்
கனத்துக்கிடக்கிறது

ஏனோ நீ
பள்ளிக்கூட வாசலில்
துள்ளிப் பிரியும்
நினைவு வந்து போகிறது
பள்ளியிலிருந்து தினமும்
இல்லம் திரும்புவாய்

விடுபட மறுத்த
உன் விரல்களை
வலிய பிரித்து
நடந்தபோது
உவகையும் வெறுமையும்
பெருமிதமும் பிரிதுயருமென
வித்தியாச அவஸ்தையில்
விம்மித் தணிகிறேன்

மகளே
கண்ணீர் கலந்த
என் பெருமூச்சு
சுமந்து வருகிறது
உனக்கான
வாழ்த்துக்களையும்
பிரார்த்தனைகளையும்

-  சுப்ரமண்ய செல்வா -

(அண்மையில் மகளை மணமுடித்துக் கொடுத்த நண்பன் சந்திராவுக்கு)

கருத்துகள் இல்லை: