திங்கள், 3 டிசம்பர், 2018

சாபமாகும் வரங்கள்

முதலாளி அரக்கரிடமிருந்து
உன்னை விடுவிப்பதாய்
உறுதி கூறும்
தொழிற்சங்க தேவர்கள்கூட
ஆசைப்படுகிறார்கள்
நீ அவர்களுக்கு
அடிமையாயிருக்க வேண்டுமென
உன் சந்தா எவ்வளவென
அறிவுறுத்தப்படுவாய்
சத்தமின்றி செலுத்து
கணக்குக் கேட்டால்
துரோகியாவாய் கவனம்
உன் ஊதியத்தையும்
உன் உணவையும்
உன் உணர்வையும்
அவர்களே தீர்மானிக்கிறார்கள்
விடுதலை தேவர்களே
விலங்கிடத் துடிக்க
பிசாசுக்கும்
ஆழ்நீலக் கடலுக்குமிடையே
பெருங்ககுழப்பத்தில் நீ.

நன்றி: தினகரன் வாரமஞ்சரி (02/12/2018)

கருத்துகள் இல்லை: