திங்கள், 3 டிசம்பர், 2018

துயிலெழுப்பல்


வானூர்தி பயணத்தில்
வாசிக்கவேன்று
கையோடு எடுத்துவந்த
கவிதை நூலை
பாதி வாசித்து
நினைவட்டை இடைச்செருகி
கண்ணயர்ந்தவனை
தட்டி எழுப்பிக்கொண்டிருக்கின்றன
வாசிக்கப்படாத கவிதைகள்

(25.11.2018 சென்னை/தில்லி வானூர்தி பயணத்தில்)

கருத்துகள் இல்லை: