ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

காதலெனப்படுவது யாதெனில்...

பாலையில் புனல் தேடும் அறிவிலியாய்
உன் மனவெளியில் ஈரம் தேடித் திரிகிறேன்
முட்டாளாய் இருப்பது புத்திசாலித்தனம் என்று
உன்னை பின்தொடரும் பொழுதுகளில்
சமாதானம்  கொள்கிறேன்
வறள்நிலங்களில் ஆழ்துளை கிணறு தோண்டுபவனின் நம்பிக்கை என
என்னுள் ஊற்றெடுக்கும் காதல் சுனை
உன்னை ஈரப்படுத்த எடுக்கும் பிரயத்தனங்கள் யாவும்
பாறையில் பெய்த பெருமழையாய்
பயனற்றுப் போகின்றன
தன் காயங்களை பாதுகாக்கும் யாசகனென
என்றோ ஒரு காதல் விபத்தில் பட்ட காயங்களை
அடைகாத்து கழிவிரக்கத்தில் களிகொள்கிறாய்
உன்னைச் சுற்றி நீ எழுப்பியிருக்கும்
தீச்சுவர் கொண்டு
அன்பு சுமந்து வரும்
ஆண் விட்டில்களை பழிதீர்க்கிறாய்
அறிந்திடு பெண்ணே
இலையுதிர் காலத்தில் நிர்வாணமான மரம்தான்
வசந்த காலத்தில் புத்திலை போர்த்திக் கொள்கிறது
இருளில் ஒளிந்திருக்கிறது விடியல்
இயற்கையை மறுதலிக்கும் உன் பிரயத்தனங்கள்
அனைத்தும் பொய்த்து
காதலெனப்படுவதுப்படுவது உதிரும் மலரல்ல
முறிந்த பின்னும் துளிர்க்கும் கிளையென
நீ அறியும் ஒருநாளில்ஒரு
எனது காதலும் காத்திருப்பும்
அர்த்தம் பெறும்

நன்றி: தினகரன் வாரமஞ்சரி (17.02.2019)

கருத்துகள் இல்லை: