வியாழன், 6 அக்டோபர், 2016

நீ நான் தெய்வம்

ஒரு நேசப்   பார்வை
ஒரு சினேகப் புன்னகை
ஒரு ஆறுதல் வார்த்தை
ஒரு செவிகொடுத்தல்
எல்லோரும் இன்புற்றிருக்க
ஒரு நினைப்பு
உதவ நீளும் கரங்கள்
உயர்த்த விரையும் கால்கள்
மற்றவர் மகிழ்ச்சி கண்டு
மகிழும்  ஒரு மனசு
போதுமிது...
தேடித்திரிய  தேவையில்லை
தெய்வம் இங்கு நீயும் நானும்!

- சுப்ரமண்ய செல்வா -

கருத்துகள் இல்லை: