திங்கள், 17 அக்டோபர், 2016

உயிர்ச்சொற்கள்

தமிழில் உயிரெழுத்து
பன்னிரெண்டு
ஆயினும் உண்மையில்
ஒவ்வொறு  எழுத்துக்கும்
உயிருண்டு
ஒவ்வொறு வார்த்தைக்கும்
உயிருண்டு

அன்பு காட்டும் வர்த்தைகள்
வன்மம் கக்கும் வார்த்தைகள்
ஆசை சொல்லும் வார்த்தைகள்
ஆளைக் கொல்லும் வார்த்தைகள்
ஆறுதல் வார்த்தைகள்
ஆத்திர வார்த்தைகள்
பாசம் பகிரும் வார்த்தைகள்
பாசாங்கு வார்த்தைகள்
சிந்தனை தூண்டும் வார்த்தைகள்
சினம் கிளரும் வார்த்தைகள்
பலம் தரும் வார்த்தைகள்
பரிகசிக்கும் வார்த்தைகள்
வியப்பு தரும் வார்த்தைகள்
விலைபேசும் வார்த்தைகள்
ஈரம் சொட்டும் வார்த்தைகள்
வறண்ட வார்த்தைகள்
உயிர் காக்கும் வார்த்தைகள்
உயிர் போக்கும் வார்த்தைகள்

             ********

என்றோ யாரோ சொன்ன
வாத்சல்ய வார்த்தையொன்று
இன்றும் மனதை நெகிழ்த்தும்

சொல்ல மறந்த
வார்த்தயொன்றின் நெருடலில்
நெஞ்சம் கனக்கும்

வருடங்கள் கடந்தும் மாறாதிருக்கும்
கீறிச் சென்ற வார்த்தைகள் தந்த
ரணங்களும் வலியும்

             ********

வார்த்தைகள்... வார்த்தைகள்... வார்த்தைகள்...

இறுதியில் மிஞ்சுவது
வார்த்தைகள் மட்டுமே
அவை நல்லவைகளாய்
இருந்துவிட்டு போகட்டுமே!

== சுப்ரமண்ய செல்வா ==

கருத்துகள் இல்லை: