ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

பிற்போடும் பிணி

பிறகு...
அப்புறம்...
நாளை...
இன்னொரு நாள்...

நேரமில்லை.
'மூட்' இல்லை.
அவசரமில்லை.

காலந்தாழ்த்த
காரணமாயிரம்.

தள்ளிப்போடும் தருணங்களிலெல்லாம்
வாய்ப்புகளை வாரிக்கொண்டு
சொல்லிக்கொள்ளாமல் விரைகிறது
காலம்.

பிற்போடும் பிணி
பீடித்தோர்க்கு
சாண் ஏற முழம் சறுக்கும்
சாகசம் நிரந்தரம்.
- சுப்ரமண்ய செல்வா -

கருத்துகள் இல்லை: