செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

நான் நீயாயின்

காட்சி ஒன்றாயினும்
காணும் நீயல்ல நான்

நம்மறிவு
நம்மனுபவம்
நம்முணர்வு
வெவ்வேறு

நீ காணும் உலகை
நின் விழி வழியே
நான் காணும் நாளில்
நான் நாமாகும்
மாயம் நிகழும்!

- சுப்ரமண்ய செல்வா - 

கருத்துகள் இல்லை: