வெள்ளி, 11 ஜூன், 2021

மனதின் பரிணாமம்

டார்வின்னின் பரிணாமக் கோட்பாடு மனிதத் தோற்றத்துடன் நிறைவுபெற்றுவிட்டது என்றே தோன்றுகிறது.  இதற்கு அப்பால் தோற்ற வேறுப்பாட்டுடன் அதிசிறந்த மனிதன் (super human) பரிணாமம் பெறும் வாய்ப்பு  மிகவும் குறைவு. இப்போது நடைபெற்றுக்- கொண்டிருப்பது அறிவின் பரிணாமம். இருபது வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட இன்றைய பத்து வயது சிறுவர்கள் அதிபுத்திசாலிகளாக இருக்கிறார்கள்.  சின்னஞ்சிறுசுகள் கைபேசிகளை அனாயசமாக கையாளும் விதம் இதற்கு ஒரு சான்று.

இதைப்போல் மனதின் பரிணாமம் மிகுந்திடின் மனிதகுலம் மேன்மையுறும். எல்லோரும் இன்புற்றிருத்தல் சாத்தியமாகும். அது என்ன மனதின் பரிணாமம்? உடலளவில் மனிதன் மாறியிருப்பினும், குணத்தளவில்  விலங்கினப் பதிவிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை. சீறும் பாம்பும், தந்திர நரியும், நிறம் மாறும் பச்சோந்தியும், குரூர கொடுமிருகங்களும் அவ்வப்போது தலைக்காட்டி தம் இருப்பை  பறைச்சாற்றிச் செல்கின்றன. இந்த விலங்கினப் பதிவுகளின் நிரந்தர வெளியேற்றமே மனதின் பரிணாமம்.

'மனிதன் என்பதன் பொருள்  மனது இதமானவன்' என்கிறார் வேதாத்திரி மகரிஷி. இதமான மனதிற்கு உரித்தாதல் மனதின் பரிணாமம்.

அன்பும் கருணையுமே இதமான மனதின் அடையாளங்கள்.  பிறருக்கு துன்பம் தராது இருத்தல் அன்பு.  எம்மால் இயன்ற அளவில் பிறர் துன்பம் போக்குதல் கருணை.  எல்லா மதங்களின் சாராம்சமும் இதுவே.

- சுப்ரமண்ய செல்வா -   #செல்வாசகம்

Facebook: https://www.facebook.com/SubrmanyaSelva/

YouTube: https://youtube.com/c/SubramanyaSelva

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அருமை.

Unknown சொன்னது…

அன்பே சிவம்
கருணையே சக்தி.
இறைவன் உண்டு.அதை அடைய வேண்டும் உணர வேண்டும்...தத்துவம்
மட்டும் உள்ளத்தில் இருந்தால் ஆணவம் வரும்...

psselvaratnam சொன்னது…

மிக்க நன்றி.

psselvaratnam சொன்னது…

உண்மை.