திங்கள், 17 மே, 2021

அர்ச்சுன மனக்குவியல் (பகுதி: 1)

அர்ச்சுன மனக்குவியல்' (Arjuna Focus) கைவரப்பெற்றால் காரியம் யாவும் கைகூடும்.  அது என்ன 'அர்ச்சுன மனக்குவியல்'?  மகாபாரதக் கதையொன்று.... பாண்டவர், கௌரவர்களின் போர் பயிற்றுவிப்பாளரான துரோணாச்சியார் ஒருமுறை தன்னிடம் பயிற்சிபெறும் இளவரசர்கள் அனைவரையும் அழைத்தார்.  அவர்களது வில்லாண்மையையும், மனக்குவியலையும் சோதிக்கும் முகமாக மரத்திலாலான ஒரு பறவையை கிளையொன்றில் வைத்து அவர்களை வில்லேந்தி  பறவையின் கண்ணை குறிபார்க்கச் சொன்னார்.  குறிபார்த்துக்கொண்டிருக்கும் ஒவ்வொறுவரிடமும் 'என்ன தெரிகிறது' என்று கேட்டார்.

"வானம், மேகம், மலை, மரம், கிளை, இலைகள், பறவை" - ஒருவர் சொன்னார்.

"மலை, மரம், கிளை, இலைகள், பறவை" - இன்னொருவர் சொன்னார்.

"மரம், கிளை, இலைகள், பறவை" - மற்றொருவர் சொன்னார்.

இப்படி ஒவ்வொறுவராக சொல்லி வர, அவர்கள் பதில்களில் திருப்தியுறாத துரோணாச்சியார்  "உங்களில் ஒருவராலும் அந்த பறவையை வீழ்த்த முடியாது" என்று கூறிவிட்டு  இறுதியாக அர்ச்சுனனிடம் கேட்டார்:

"உனக்கு என்ன தெரிகிறது?"

"கருமை குருவே... கருமை மட்டுமே தெரிகிறது"

"வேறு என்ன தெரிகிறது?"

"வேறு எதுவும் தெரியவில்லை, கருமை மட்டுமே தெரிகிறது"

"என்ன கருமை அது?"

"பறவையின் கண்மணியின் கருமை குருவே... எனக்கு வேறெதுவும் தெரியவில்லை"

"அம்பை எய்து"  அடுத்த கணம் அம்பு பறவையின் கண்களை துளைத்தது.

தன்னிகரற்ற வில்லாளியான அர்ச்சுனனின் மனக்குவியல் அத்தகையது.  நமக்கும் அத்தகைய மனக்குவியல் கைவரப்பெற்றால் எல்லாச் செயல்களும் வெற்றிச்சிகரத்தை தொட்டு நிற்கும். அதை அடைவது எப்படி? (தொடரும்...)

- சுப்ரமண்ய செல்வா -    #செல்வாசகம்


1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Best wishes for your new series. Interesting subject ����