ஞாயிறு, 23 மே, 2021

ஒரு பிரார்த்தனை

அன்பும் கருணையுமே அனைத்து மதங்களின் சாரம். பிறருக்கு துன்பம் தராதிருத்தல் அன்பு. பிறர் துன்பம் போக்குதல் கருணை.  

இது புனித பிரான்சிஸ் அவர்களின் பிரார்த்தனை என்று இணையத்தில் வாசித்தது.  ஆனால் அது அவருடையது என்பதற்கு எவ்வித சான்றும் இல்லை என்கிற கருத்தும் நிலவுகிறது.  அது எதுவாக இருந்தால் என்ன, மனதை இதமாக்குகிற எந்த பிரார்த்தனையும் எல்லோருக்குமானதே.

************************

இறைவா... நினது சமாதானத்தின் கருவியாக எனை ஆக்குவாயாக. 
எங்கு வெறுப்பு நிறைந்திருக்கிறதோ, 
அங்கு நான் அன்பை விதைப்பேனாக. 
எங்கு காயம் நிறைந்திருக்கிறதோ, 
அங்கு நான் மன்னிப்பை விதைப்பேனாக. 
எங்கு முரண்பாடு நிறைந்திருக்கிறதோ, 
அங்கு ஐக்கியத்தை விதைப்பேனாக. 
எங்கு ஐயம் நிறைந்திருக்கிறதோ, 
அங்கு நான் உறுதியை விதைப்பேனாக. 
எங்கு விரக்தி நிறந்திருக்கிறாதோ, 
அங்கு நான் நம்பிக்கையை விதைப்பேனாக. 
எங்கு இருள் நிறைந்திருக்கிறதோ, 
அங்கு நான் ஒளியை விதைப்பேனாக. 
எங்கு துயரம் நிறைந்திருக்கிறதோ, 
அங்கு நான் மகிழ்ச்சியை விதைப்பேனாக.

தெய்வீகத் தந்தையே, 
ஆறுதல் அளிப்பது போல் ஆறுதல் பெறவும் 
புரிந்துகொள்வது போல் புரிந்துகொள்ளப்படவும் 
அன்பு செய்வது போல்  அன்பு செய்யப்படவும் 
எனக்கருள்வாய். 
ஏனெனில் 
கொடுப்பதனாலேயே பெறுகிறோம். 
மன்னிப்பதனாலேயே மன்னிக்கப்படுகிறோம். 
'நான்' என்கிற அந்த சிறுமையின் மரணத்திலேயே 
அழிவற்ற நிரந்தர வாழ்வில் பிறக்கிறோம்.

************************

புனித. ஃபிரான்சிஸ் அவர்களின் பிரார்த்தனை
தமிழாக்கம்: சுப்ரமண்ய செல்வா   

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

Nice writing.

பெயரில்லா சொன்னது…

Amen ��